search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மது"

    • புகாரளிக்க புதிய செல்போன் எண் அறிவிப்பு
    • சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து புகாரளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானம், போலி மது ஆகியவை விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு பிரிவு போலீசாரின் செல்போன் எண்ணுக்கு (9514220020) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இதன்அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும்.

    எனவே கோவை மாநகரில் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்க முன்வரவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடைபெற்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 474 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளி சத்யராஜ் என்பவருக்கு இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுவதற்கான ரூ.5080 முன்வைப்பு தொகைக்கான காசோலையை வழங்கினார்.

    முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×